ஆப்நகரம்

தம்பி வசந்தகுமார் இறந்த அதிர்ச்சி: குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதி!

நாடாளுமன்ற உறுப்பினரும், சகோதரருமான வசந்தகுமாரின் மறிவு செய்தி கேட்ட அதிர்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Samayam Tamil 28 Aug 2020, 11:53 pm
கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார், கடந்த 10ஆம் தேதி சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 70.
Samayam Tamil குமரி அனந்தன்
குமரி அனந்தன்


இந்த நிலையில், அவரது சகோதரர் குமரி அந்தனன் வசந்தகுமாரின் மறைவு செய்தி கேட்டு அதிர்சியடைந்து ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக பாஜக தலைவராக இருந்தவரும், தற்போது தெலங்கானா ஆளுநராக இருப்பவருமான தமிழிசையின் தந்தை குமரி அனந்தன் என்பது கவனிக்கத்தக்கது.

தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி, பெருந்தலைவர் காமராசருடன் இணைந்து பணியாற்றிய பெருமை பெற்றவர். முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர், முன்னாள் மக்களவை உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தமிழ் இலக்கியங்களில் புலமை பெற்றவர் இலக்கியப் பேச்சாற்றல் மிக்க தமிழ் இலக்கியவாதி, என்று பன்முகத் திறன் கொண்டவர் குமரி அனந்தன்.

பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் எம்பி வசந்தகுமாரின் உடல்

கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருச்சுணன் - தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக பிறந்தவர் குமரி அனந்தன். இவரது மனைவி பெயர் கிருஷ்ணகுமாரி. இந்த தம்பதியினரின் மகள்தான் தெலங்கானா ஆளுநர் தமிழிசை. இவரது சகோதரர் வசந்தகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி