ஆப்நகரம்

டாஸ்மாக் எதிர்ப்பு: விசிக நடத்தும் நூதனப் போராட்டம்

தனித்திருந்து ஒருங்கிணைவோம் என்ற முழக்கத்துடன் டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார் திருமாவளவன்.

Samayam Tamil 6 May 2020, 2:40 pm
தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ள நிலையில், அதனை எதிர்த்து புதியதாக நூதன ஆர்ப்பாட்டம் ஒன்றை அறிவித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.
Samayam Tamil thirumavalavan


தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் மடங்குகளில் உயர்ந்து வரும் நிலையில், நாளை (மே7) முதல் மதுக்கடைகளைத் திறக்க முடிவெடுத்துள்ளது மாநில அரசு. இதற்காக பிரத்யேகமான அறிவிப்பு வெளியாகி இரண்டு நாட்களாக பரபரப்பாகபேசப்பட்டுக்கொண்டிருக்கிறது.

அண்டை மாநிலங்களான கர்நாடகா ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக நிரம்பி வழியும் காட்சிகள் வெளியாகி வருகின்றன.

கொரோனா: தமிழ்நாட்டின் தற்போதைய நிலை இதுதான்!

இப்படியிருக்க, கொரோனா பாதிப்பில் இந்தியாவிலேயே இரண்டாவது இடம் வகிக்கும் தமிழ்நாடு, சமூக இடைவெளியைக் கடைபிடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில், மதுக்கடைகளைத் திறக்கும் முடிவில் உறுதியாக இருக்கிறது. இதனை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு நூதனப் போராட்டத்தை அறிவித்துள்ளது.

அதாவது, நாளை அனைவரும் தங்கள் வீட்டு வாசல்களில் நின்று கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அலட்சியம் காட்டும் மாநில அரசைக் கண்டித்தும், டாஸ்மாக் திறப்பு நடவடிக்கையை எதிர்த்தும் கோஷங்கள் எழுப்ப வேண்டும்.


தமிழகமெங்கும் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இந்த போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.

கேரளாவுக்கு ஏற்றுமதியான கோயம்பேடு கொரோனா: விழுப்புரத்தில் மேலும் பாதிப்பு!

மேலும் இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விழுப்பரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் மற்றும் சிதம்பரம் மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன் ஆகிய இருவரும் போராட்டத்தை தொடங்கி டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.


இதனைத் தொடர்ந்து விசிக தொண்டர்கள் பலரும் இதனை பின்பற்றி வருகின்றனர்.

அடுத்த செய்தி