ஆப்நகரம்

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் திருமாவளவன்.. சட்டென சொன்ன ஜெயக்குமார்.. திகைக்கும் ஸ்டாலின்

"திமுக ஆட்சியில் ஆதி திராவிட மக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை.. இதையெல்லாம் திருமாவளவன் பொறுத்துக் கொள்ள மாட்டார். அவர் விரைவில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவார்" என்று அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Authored byஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil 27 Aug 2023, 8:36 pm
சென்னை: திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விரைவில் வெளியேறப் போவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Collage Maker-27-Aug-2023-08-36-PM-6658


திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிக்கும் போதிலும், திருமாவளவனின் சமீபகால பேச்சுகள் அவர் கூட்டணியில் இருந்து விலகி விடுவாரோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற விசிக பொதுக்கூட்டத்தில், "எம்.பி. பதவியில் இருக்க வேண்டுமே என பயந்து போய் கூட்டணியில் ஒட்டிக்கொள்ளும் ஆள் இந்த திருமாவளவன் அல்ல. பதவி எனது தலைமுடியை போன்றது. நாளைக்கே திமுக கூட்டணியில் பாமக சேர்ந்தால் முதலில் வெளியே வருபவன் நானாக தான் இருப்பேன்" என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் திருமாவளவன்.

"மதவெறியை தூண்டுறீங்களா".. கர்ஜித்த பொன்முடி.. அலட்சியமாக டீல் செய்த அண்ணாமலை.. முரட்டு சம்பவம்

திமுக கூட்டணியில் சேர பாமக முயற்சி செய்து வந்த சூழலில், திமுகவை எச்சரிக்கும் வகையில் திருமாவளவன் அவ்வாறு பேசியிருந்தார். அதேபோல, எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவை பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுங்கள் என தொடர்ச்சியாக கூறி வருகிறார் திருமாவளவன்.

அதிமுக மாநாட்டிற்கு வந்தவரின் மனைவி மாயம்.. ஜெயக்குமாரை அட்டாக் செய்த உதயநிதி

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நாங்குநேரி பட்டியலின மாணவன் மீதான கொலைவெறி தாக்குதலும், சிகிச்சையில் உள்ள மாணவனை முதல்வர் வந்து பார்க்காததும் திருமாவளவனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் இதுதொடர்பாக பேசியுள்ளார். அவர் கூறுகையில், "நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கின்றன. இந்த சமயத்தில் அரசியலில் நிறைய மாற்றங்கள் வரலாம். திமுக கூட்டணியில் இருந்து பலர் வெளியேறலாம். அந்த வகையில் திமுக கூட்டணியில் இருக்க திருமாவளவனுக்கே விருப்பமில்லை. விருப்பம் இல்லாமல்தான் அவர் கூட்டணியில் இருக்கிறார். திமுக ஆட்சியில் ஆதி திராவிட மக்களின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை.. உடைமைக்கும் பாதுகாப்பு இல்லை. இதை எப்படி திருமாவளவன் பொறுத்துக் கொண்டு இருப்பார்? எனவே திருமாவளவன் விரைவில் கூட்டணியில் இருந்து வெளியேறுவார்" என ஜெயக்குமார் கூறினார்.
எழுத்தாளர் பற்றி
ஜே. ஜாக்சன் சிங்
நான் ஜா.ஜாக்சன் சிங். 12 ஆண்டுகள் ஊடகத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். களத்தில் செய்தி சேகரித்த அனுபவமும் உண்டு. தேசிய, சர்வதேச செய்திகளில் ஆர்வம் அதிகம். தமிழக அரசியல் செய்திகளிலும் ஈடுபாடு கொண்டவன். எளிமையாகவும், சுவாரசியமாகவும் மொழிபெயர்ப்பதில் விருப்பம. இப்போது Times Of India சமயம் தமிழில் Digital Content Producer ஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி