ஆப்நகரம்

ம.ந.கூ-வில் இருந்து வெளியேறியது வி.சி.க

விடுதலை சிறுத்தைக் கட்சி மக்கள் நலக்கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அக்கட்சியின் தலைவர் தொல்திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

TNN 18 Mar 2017, 6:04 pm
விடுதலை சிறுத்தைக் கட்சி மக்கள் நலக்கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அக்கட்சியின் தலைவர் தொல்திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil vck exits from peoples welfare front
ம.ந.கூ-வில் இருந்து வெளியேறியது வி.சி.க


இதுகுறித்து அவர் கூறும்போது, " ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எடுக்கப்படும் முடிவு தற்காலிகமானது அல்ல. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை.ஆர்.கே.நகர் தேர்தலில் மக்கள்நலக் கூட்டணியாக எங்களால் செயல்பட முடியவில்லை.எனவே அக்கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைக் கட்சி வெளியேறுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

பாமக,மதிமுக,தாமக போன்ற சில கட்சிகள் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளன. ஆனால் மக்கள் நலக்கூட்டணி ஆர்.கே நகர் தேர்தல் குறித்து தங்கள் முடிவை தெரிவிக்க காலம் தாழ்த்தி வந்தது. இந்தநிலையில் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதை விரும்பவில்லை.ஆனால் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்.கே.நகரில் தனித்து போட்டியிட விருப்புவதாக அறிவித்தது.
VCK exits from people's welfare front

அடுத்த செய்தி