ஆப்நகரம்

அபிநந்தன் பெற்றோர்களை நேரில் சந்தித்து நம்பிக்கையூட்டிய தொல்.திருமாவளவன்!

இந்திய போர்ப்படை விமானி அபிநந்தன் பெற்றோர்களை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்தார்.

Samayam Tamil 28 Feb 2019, 8:03 pm
இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்களை விரட்டி அடிக்க, இந்திய போர் விமானங்கள் புறப்பட்டன. அப்போது விங் கமாண்டர் அபிநந்தன் சென்ற போர் விமானம் மட்டும் திரும்பவில்லை.
Samayam Tamil Thiruma


இதனால் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அபிநந்தன் தங்கள் வசம் இருக்கும் வீடியோவை, பாகிஸ்தான் ராணுவத்தினர் வெளியிட்டனர். இதைத் தொடர்ந்து அவரை மீட்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது.

இந்தச் சூழலில் அபிநந்தன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவருடைய பெற்றோரைச் சந்தித்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று அபிநந்தனின் பெற்றோரைச் சந்தித்து நம்பிக்கையூட்டினார்.

இதற்கிடையில் அபிநந்தனை நாளை விடுவிக்க உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். இது ஒட்டுமொத்த இந்தியர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி