ஆப்நகரம்

விடுதலைச் சிறுத்தைகள் செய்த 3 உலக சாதனைகள்!

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிளாஸ்டிக் ஒழிப்பு, பனை வளர்ப்பு உள்ளிட்ட முயற்சிகளால் 3 உலக சாதனைகளை முன்னெடுத்து, 2 அங்கிகாரங்களைப் பெற்றுள்ளது.

Samayam Tamil 14 Oct 2019, 10:07 am
பனை மரம் வளர்ப்பு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொடர்ந்து தனது கட்சிக்காரர்கள் மத்தியில் தொடர்ந்து பேசி வருகிறார். அதிகளவில் பனை மரங்களை வளர்ப்பதன் மூலம் எதிர்காலத்தில் நமது குழந்தைகள் நல்ல வாழ்வை பெற்றிடுவார்கள் என்ற வழியிலே திருமாவளவன் இந்த கொள்கைகளைக் கொண்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
Samayam Tamil திருமா


இந்நிலையில், திருமாவளவனின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் வகையில், கடலூர் மாவட்டம், மஞ்சக் குப்பம் மைதானத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை விதைகளை நடுவதுக்காக, சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கூடியிருந்தனர்.

அரசுப் பள்ளியில் படிக்கும் மாவட்ட ஆட்சியரின் மகள்....ஆச்சர்யத்தில் மக்கள் !!


பள்ளி மாணவியின் நேர்மைக்கு ஜெர்மனியில் இருந்து வந்த பரிசு !!

இதில் சாதனை முயற்சியாக, 10 ஆயிரத்து 456 பனை விதைகளைக் கொண்டு திருமாவளவன் முகத்தை வரைந்தது போல் தூவி இருந்தனர். அதேபோல், 3 ஆயிரத்து 46 பேர், திருமாவளவன் முகமூடியை அணிந்து கொண்டு, அம்பேத்கரை முகத்தைப் போல வரிசையாக நின்றிருந்தனர். 3வது சாதனையாக 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள், தங்கள் கையில் துணிப்பையைக் கொண்டு, பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகளின் இந்த சாதனை முயற்சியை அங்கீகரித்து, யூனிவர்செல் அச்சிவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ப்யூட்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்துள்ளது.

அடுத்த செய்தி