ஆப்நகரம்

தூத்துக்குடி சம்பவம் மனவேதனையை அதிகரிக்கிறது- வேதாந்தா

தூத்துக்குடி சம்பவத்தால் பெரும் வேதனை அடைந்திருப்பதாக ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 23 May 2018, 4:57 pm
தூத்துக்குடி சம்பவத்தால் பெரும் வேதனை அடைந்திருப்பதாக ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil vedanta_cover_pic
தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட வேதாந்தா


ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது காவல்துறையினர் துப்பாகிச்சூடு நடத்தினர். இதில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரழந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை பதப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலையின் தாய் நிறுவனமான வேதாந்தா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தூத்துக்குடி சம்பவம் பெரும் வேதனை அளிப்பதாக வேதாந்தா தெரிவித்துள்ளது.

மேலும், ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க அரசை கேட்டுக்கொண்டுள்ள அந்நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலை இயங்க உரிய அனுமதிக்கு வேண்டி காத்திருப்பதாக வேதாந்தா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், பங்குச்சந்தையில் அந்நிறுவனத்தின் பங்கு இன்று சரிவை கண்டுள்ளது. காலை நேரத்தில் 3-2 சதவீதமாக இருந்த வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள், தற்போதைய நேரத்தில் 5 சதவீதமாக சரிந்துள்ளது.

அடுத்த செய்தி