ஆப்நகரம்

கைக்கெட்டியும் வாய்க்கெட்டாமல் போகக்கூடும்: வீரமணி எச்சரிக்கை

கைக்கெட்டியும் வாய்க்கெட்டாமல் போகக்கூடும் என ஜல்லிக்கட்டு அவசர சட்டம் குறித்து திராவிடர் கழக தலைவர் வீரமணி எச்சரித்துள்ளார்.

TNN 21 Jan 2017, 3:31 pm
சென்னை: கைக்கெட்டியும் வாய்க்கெட்டாமல் போகக்கூடும் என ஜல்லிக்கட்டு அவசர சட்டம் குறித்து திராவிடர் கழக தலைவர் வீரமணி எச்சரித்துள்ளார்.
Samayam Tamil veeramani warns tamilnadu government about jallikattu ordinance
கைக்கெட்டியும் வாய்க்கெட்டாமல் போகக்கூடும்: வீரமணி எச்சரிக்கை


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: தற்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழ்நாடு மாநில அரசு கொண்டு வரவிருக்கும் அவசரச் சட்டத்திற்கு, மத்தியஅரசின் மூன்று துறைகளின் ஒப்புதல் பெற்றால் மட்டும் போதாது.

இறுதியாக அது சட்ட அதிகாரம் பெற, குடியரசுத் தலைவரின் கையொப்பமும் கட்டாயம் தேவை. இல்லையென்றால் இதை வைத்து, பிறகு சட்ட சிக்கல் ஏற்படலாம். எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக குடியரசுத் தலைவர் கையொப்பம் - ஒப்புதலைப் பெறுவதும் அவசரம், அவசியம் என்று சில சட்ட நிபுணர்களின் கருத்தும் உள்ளதால், தமிழக அரசு அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக களமிறங்கிய மாணவர்கள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்களின் எழுச்சியை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்காக அவசர சட்டம் பிறப்பிக்கும் பொருட்டு, சட்ட வரைவு ஒன்றை தயார் செய்த தமிழக அரசு, அதனை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த சட்ட வரைவு, தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Veeramani warns Tamilnadu government about jallikattu ordinance

அடுத்த செய்தி