கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி நிரம்பத் தொடங்கியதால், ஓராண்டுக்கு பிறகு, சென்னையின் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் நீர்மட்டம் முற்றிலுமாக குறைந்தது. இதில் சோழவரம் ஏரி முழுமையாக வறண்டு, சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது.
இந்த நிலையில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்ட தொடங்கி உள்ளது. இந்நிலையில் ஏரியின் பாதுகாப்பை கருதியும், பாசனத்துக்காகவும் வீராணம் ஏரியில் இருந்து ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. சென்னைக்கு ஓராண்டுக்கு பின் குடிநீருக்காக திறந்து விடப்பட்டது.
சென்னையில் நேற்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை மாநகருக்கு 650 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். சென்னை மாநகருக்கு தற்பொழுது விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவினை கூடுதலாக்கி விநியோகிக்க, இன்றுமுதல் வீராணம் ஏரியிலிருந்து நாளொன்றுக்கு 120 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்படுவதாகவும் கூறினார்.
Veeranam lake water open for Chennai people.
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் நீர்மட்டம் முற்றிலுமாக குறைந்தது. இதில் சோழவரம் ஏரி முழுமையாக வறண்டு, சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது.
இந்த நிலையில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்ட தொடங்கி உள்ளது. இந்நிலையில் ஏரியின் பாதுகாப்பை கருதியும், பாசனத்துக்காகவும் வீராணம் ஏரியில் இருந்து ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. சென்னைக்கு ஓராண்டுக்கு பின் குடிநீருக்காக திறந்து விடப்பட்டது.
சென்னையில் நேற்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை மாநகருக்கு 650 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். சென்னை மாநகருக்கு தற்பொழுது விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவினை கூடுதலாக்கி விநியோகிக்க, இன்றுமுதல் வீராணம் ஏரியிலிருந்து நாளொன்றுக்கு 120 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்படுவதாகவும் கூறினார்.
Veeranam lake water open for Chennai people.