ஆப்நகரம்

சென்னை குடிநீர் தேவைக்காக ரகசியமாக திறக்கப்பட்டதா வீராணம் ஏரி?

வீராணம் ஏரி சென்னை மாநகரத்தின் குடிநீர் தேவைக்காக ரகசியமாக திறக்கப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்

TNN 2 Nov 2017, 3:06 pm
சேத்தியாத்தோப்பு: வீராணம் ஏரி சென்னை மாநகரத்தின் குடிநீர் தேவைக்காக ரகசியமாக திறக்கப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Samayam Tamil veeranam water secretly opened for chennai farmers disappointed
சென்னை குடிநீர் தேவைக்காக ரகசியமாக திறக்கப்பட்டதா வீராணம் ஏரி?


வடகிழக்குப் பரவமழை பெய்து வருவதால், கடலூர் மாவட்டம் பூதங்குடியில் இருக்கும் வீராணம் ஏரிக்கு பல வழித்தடங்களில் நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில், மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு நீர் அனுப்பும் நெடுமாடம் பகுதியில் உள்ள ஷட்டரை மலர் தூவி திறந்துள்ளனர். இந்த நிகழ்வில் குறிப்பிட்ட சில அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றனர்.

சென்னைக்கு நீர் திறந்து விட்டதால், சம்பாநெல் உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.

Veeranam Water secretly opened for Chennai, Farmers disappointed.

அடுத்த செய்தி