ஆப்நகரம்

பணம் உள்ள போக வாய்ப்பே இல்லை; ஆர்.கே.நகரில் வளைத்து வளைத்து வாகன சோதனை!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒட்டி, பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

TNN 25 Nov 2017, 6:37 am
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒட்டி, பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil vehicles thoroughly checked due to rk nagar byelection
பணம் உள்ள போக வாய்ப்பே இல்லை; ஆர்.கே.நகரில் வளைத்து வளைத்து வாகன சோதனை!


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின், காலியான ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான தேர்தல் அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. வேட்பு மனு தாக்கல் நவம்பர் 27ல் தொடங்குகிறது. இறுதி நாள் டிசம்பர் 4ஆம் தேதி ஆகும்.

வேட்புமனுவை வாபஸ் பெற டிசம்பர் 7ஆம் தேதி இறுதி நாள். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 24ஆம் தேதி நடைபெறுகிறது.

தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிட்ட உடனே, அந்த தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

இந்நிலையில் இன்று அதிகாலை முதல் ஆர்.கே.நகரின் 11 இடங்களில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

இதில் சென்னை கூடுதல் காவல் ஆணையர் ஜெயராம், இணை ஆணையர் சுதாகர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

Vehicles thoroughly checked due to RK Nagar byelection.

அடுத்த செய்தி