ஆப்நகரம்

அரசு அதிகாரிகள் என்றும் பாராமல் அசிங்கப்படுத்திய பெண் டாக்டர்!

வேலூரில் டெங்கு சோதனைக்காக வீட்டைப் பார்வையிட வந்த அரசு அதிகாரிகளை திட்டிய டாக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

TNN 24 Oct 2017, 6:48 pm
வேலூரில் டெங்கு சோதனைக்காக வீட்டைப் பார்வையிட வந்த அரசு அதிகாரிகளை திட்டிய டாக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil vellore case filed against lady doctor for abusing vellore district collector officials
அரசு அதிகாரிகள் என்றும் பாராமல் அசிங்கப்படுத்திய பெண் டாக்டர்!


தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மோசமாக உள்ளதால், டெங்கு கொசுக்களின் உற்பத்தியைத் தடுக்க அரசு அதிகாரிகள் வீடு வீடாகச் சென்ற ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வேலூர் மாவட்ட கலெக்டர் எஸ்ஏ ராமன் மற்றும் சில அரசு அதிகாரிகள் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதிப் பிரிவு மற்றும் சிஎம்சி காலனியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள வீடு ஒன்றில் ஆய்வு செய்வதற்காக சென்றபோது, வீட்டிலிருந்த ஜூடித் என்ற பெண் மருத்துவர் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். கலெக்டர் அவரிடம் விளக்க முயற்சித்தும், அவர் தொடர்ந்து அவர்களை பேச விடாமல் திட்டி, அவர்கள் ஆய்வு செய்வதைத் தடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, போலீஸ் அவர் மீது தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டியது மற்றும் அரசு அதிகாரிகளை அவர்கள் கடமையை செய்ய விடாமல் தடுத்தது ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Vellore: Case filed against lady doctor for abusing Vellore district collector, officials

அடுத்த செய்தி