வேலூர்: 45 வயது மதிக்கத்தக்க கொலை குற்றவாளி சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த 1998ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை வழக்கில், ஆர்காட்டை அடுத்த கலவாய் கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை கழிவறைக்கு சென்ற கஜேந்திரன், ஷூ-லேஸ் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இது சிறை அதிகாரிகளின் ஷூ-லேஸ் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது எப்படி கஜேந்திரனுக்கு கிடைத்தது என்று தெரியவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக பகயம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த கஜேந்திரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
கஜேந்திரன் குறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த 2004ஆம் ஆண்டு ஜாமின் மூலம் வெளியே சென்ற அவர், தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் 10 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இந்நிலையில் சிறப்பு காவல்படையினர், ராணிப்பேட்டையில் கஜேந்திரனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Vellore Central Prison inmate commits suicide using shoelaces.
கடந்த 1998ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை வழக்கில், ஆர்காட்டை அடுத்த கலவாய் கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை கழிவறைக்கு சென்ற கஜேந்திரன், ஷூ-லேஸ் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இது சிறை அதிகாரிகளின் ஷூ-லேஸ் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது எப்படி கஜேந்திரனுக்கு கிடைத்தது என்று தெரியவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக பகயம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த கஜேந்திரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
கஜேந்திரன் குறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த 2004ஆம் ஆண்டு ஜாமின் மூலம் வெளியே சென்ற அவர், தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் 10 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இந்நிலையில் சிறப்பு காவல்படையினர், ராணிப்பேட்டையில் கஜேந்திரனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Vellore Central Prison inmate commits suicide using shoelaces.