ஆப்நகரம்

ஹைட்ரோகார்பன் திட்டம்: விவசாயிகளை நக்கல் செய்த வேலூர் மாவட்ட ஆட்சியர்!

ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றி உண்மை தெரியாமல் விவசாயிகள் போராட்டம் நடத்துவதாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

TNN 18 Mar 2017, 2:02 am
ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றி உண்மை தெரியாமல் விவசாயிகள் போராட்டம் நடத்துவதாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
Samayam Tamil vellore district collector teased farmers over hydrocarbon project
ஹைட்ரோகார்பன் திட்டம்: விவசாயிகளை நக்கல் செய்த வேலூர் மாவட்ட ஆட்சியர்!


வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம், ஆட்சியர் ராமன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது விளைநிலங்கள் வழியாக, எரிவாயுக் குழாய் அமைப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதென்றும், இத்தகைய பணிகளை அனுமதிக்க வேண்டாம் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இதுபற்றி பதில் அளித்துப் பேசிய ஆட்சியர் ராமன், இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கும் வகையில், விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு வதந்திகளை கிளப்பிவருவதாகக் கிண்டல் செய்தார். ஹைட்ரோகார்பன் திட்டத்தின் உண்மைத்தன்மை தெரியாமல், அதற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தொடர்ந்து அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு வீண் முட்டுக்கட்டை போடுவதாகவும் அவர் அதிருப்தி தெரிவித்தார்.

ஆட்சியர் ராமனின் அலட்சிய பேச்சு, விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vellore district Collector teased farmers for protesting against hydrocarbon project.

அடுத்த செய்தி