ஆப்நகரம்

பல்பு வாங்கியத்தில் அமைச்சர் வேலுமணி முறைகேடு- திமுக எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

எல்.இ.டி பல்பு வாங்கியதில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஊழல் செய்துவிட்டதாக திமுக எம்.எல்.ஏ புகார் தெரிவித்திருப்பது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.

Samayam Tamil 30 Dec 2018, 11:11 pm
ரூ. 300 எல்.இ.டி ரக மின் விளக்குகளை ரூ. 3500 என்று கூறி அமைச்சர் வேலுமணி ஊழல் செய்துவிட்டதாக வேலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Samayam Tamil பல்பு வாங்குவதில் கூட ஊழல் செய்த அதிமுக அமைச்சர்- திமுக எம்.எல்.ஏ தாக்கு


வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் நடைபெற்ற திமுக அலுவககத்தில் கட்சி பொறுப்பாளர்களின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக கட்சியினர் பலர் பங்கேற்றிருந்தனர்.

ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேசிய ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏ ஜெ.எஸ். ஈஸ்வரப்பன் அதிமுக அமைச்சர் வேலுமணி எல்.இ.டி பல்பு வாங்கியதில் ஊழல் செய்துவிட்டதாக தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், ரூ. 300 மதிப்பிலான எல்.இ.டி விளக்குகளை ரூ. 3500 என விலை நிர்ணயித்து பணத்தை கொள்ளையடித்து விட்டதாக தெரிவித்தார். இதுபோன்ற கொள்ளைகள் பற்றி பொதுமக்களுக்கு தெரியவதில்லை. ஆகவே இந்த ஊழலை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என அவர் பேசினார்.

அடுத்த செய்தி