ஆப்நகரம்

வேலூரில் கடந்த 100 ஆண்டுகால சாதனையை முறியடித்த மழை- தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!

வேலூரில் கடந்த 1909-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி 106 மி.மீ மழை பெய்தது. இந்நிலையில் நேற்று (ஆக-16) நேற்று 166 மி.மீ மழை பதிவாகி 100 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளது.

Samayam Tamil 17 Aug 2019, 12:23 pm
வேலூரில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு, 166 மி.மீ மழை பதிவாகியுள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
Samayam Tamil வேலூரில் கடந்த 100 ஆண்டுகால சாதனையை முறியடித்த மழை- தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!
வேலூரில் கடந்த 100 ஆண்டுகால சாதனையை முறியடித்த மழை- தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென் மேற்குப் பருவக்காற்றின் தாக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையின் பல இடங்களில் நேற்றிரவு இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது. இன்று காலையிலும் மழை தொடர்ந்தது. இதனால் நகர் முழுவதும் குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது.

அதேபோல், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், நீலகிரி, ஈரோடு நாமக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.50 அடியாக உயர்வு!

வேலூர், வாணியம்பாடி, காட்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேலூர் மழை 100 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார். அதில், கடந்த நூறு வருடங்களுக்கு முன், 1909-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி வேலூரில் தொடர்ந்து 24 மணிநேரத்தில் 106 மி.மீ மழை பெய்தது. இந்நிலையில் நேற்று (ஆக-16) வேலூரில் நேற்று 166 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 100 ஆண்டுகளில் வேலூரில் பெய்த அதிகபட்ச மழை ஆகும் என்று கூறியுள்ளார்.

அத்தி வரதர் வைபத்தின் கடைசி தீபராதனை- இனி 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்!

இதனிடையே, வெப்பச்சலனம் காரணமாக, வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Jammu Kashmir: அதிர்ச்சி செய்தி; பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் - உஷார் நிலையில் காஷ்மீர்!

அடுத்த செய்தி