ஆப்நகரம்

அரசுப்பள்ளியில் விஷமாக மாறிவரும் சத்துணவுத் திட்டம்...

அரசுப்பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவில் புழு, பூச்சி இருப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மாணவர்கள் புகார்...

Samayam Tamil 7 Dec 2019, 9:04 pm
சமையல் ஊழியர் பள்ளிக்குக் காலதாமதமாக வருவது, சுகாதாரமற்ற முறையில் உணவை சமைப்பதுமாக இருந்துள்ளது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Samayam Tamil images (3)


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கல்லூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு சுமார் 263 மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த பள்ளிக்கு அருகில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அங்கு சுமார் 150 மாணவர்கள் படிக்கிறார்கள். இருப் பள்ளியையும் சேர்த்து, மதிய உணவு சாப்பிடும் குழ்ந்தைகள் சுமார் 350 பேர் இருப்பார்கள்..

இந்நிலையில், பள்ளி இன்று வழக்கம்போல் செயல்பட்டது. ஆனால், பள்ளிக்கு மதிய உணவு சமைக்கும் ஊழியர் சாந்தா வராததால் சமையல் பணிகள் நடைபெறவில்லை. சமையல் பணி நடைபெறவில்லை என்பது குறித்து தலைமை ஆசிரியர், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி அவர்களிடம் புகார் கொடுத்தார். இதற்கிடையில் சாந்தா வழக்கமாகப் பள்ளிக்கு மிகவும் காலதாமதமாக வருவதாக புகார் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர்: அங்கன்வாடி மதிய உணவில் கெட்டுப்போன முட்டைகள்...

சம்பவம் குறித்து கேள்விப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி பள்ளிக்கு நேரில் புறப்பட்டு சென்று, ஆய்வு செய்தார். அப்போது சாந்தா காலதாமதமாக வந்து சமையல் செய்தது கண்டறியப்பட்டது. மேலும் சமையல் ஊழியர் சாந்தா பள்ளிக்குக் காலதாமதமாக வருவது கண்டறியப்பட்டது.

சாந்தாவின் இந்த செயலால், பள்ளியில் மாணவர்கள் தினமும் பசியில் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஆய்வுக்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தார்.

அதேபோல், சமையல் ஊழியரின் நடவடிக்கை குறித்து பள்ளி மாணவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் விசாரணை செய்தார். அப்போது மாணவர்களும் மதிய உணவு சரிவர வழங்குவதில்லை என்றும், பெரும்பாலும் அதில் பூச்சி புழுக்கள் உள்ளது என்றும் புகார்களை அடுக்கினர்.

இளம்பெண் நடனமாட மறுத்ததால் முகத்திலேயே சுட்ட நபர்..! உ.பியில் மீண்டும் கொடூரம்... வீடியோ!

அதிர்ச்சியடைந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி, விரைவில் சமையல் ஊழியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துச் சென்றார்.

அடுத்த செய்தி