ஆப்நகரம்

மீனவர்களுக்கு வீடு கட்டிக் கொள்ள அரசு நிதி - விண்ணப்பித்து பெற வேலூர் கூட்டத்தில் அறிவிப்பு!

வேலூரில் மீன்வளத்துறையின் சார்பில் மீனவர்களுக்கான மகா சபா கூட்டத்தில், இலவச வீடு கட்டும் திட்டத்தை பயன்படுத்திக் கொள்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

Samayam Tamil 20 Feb 2019, 9:48 pm
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மீன் வளத்துறையின் உதவி இயக்குநர் அலுவலகத்தில் மீனவர் சங்கங்களின் மகா சபா கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த மீனவர் சங்கங்கள் கலந்து கொண்டன.

இந்த கூட்டத்திற்கு மீனவர் கூட்டுறவு சம்மேளன தலைவர் சிவா தலைமை வகித்தார். மேலும் உதவி இயக்குநர் சிவகுமார் உள்ளிட்ட மீன் வளத்துறையின் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதில் தமிழக அரசின் சார்பில் மீனவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க அளிக்கப்படும் நிதி குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அதனை முறைப்படி எப்படி விண்ணப்பித்து பெறுவது, மீன் வலைகளை மானியத்தில் பெறுவது, படகுகள் வாங்க கடன் உதவி, அதனை பழுது பார்க்க அரசு உதவி, மீன் வளத்தை பெருக்கும் நோக்கத்தில் பண்ணை குட்டை அமைத்தல், அதற்கான நிதி ஒதுக்கீடு, ஏரிகளில் மீன் வளர்க்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மீனவர்களுக்கு எடுத்து கூறப்பட்டது.

இவற்றைப் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென அதிகாரிகள் எடுத்து கூறினார்.

அடுத்த செய்தி