ஆப்நகரம்

தமிழக கடற்படை வீரர் ஆயுத பயிற்சியின் போது மும்பையில் மரணம்!

காட்பாடியை சேர்ந்த கடற்படை வீரர் மோகன்ராஜ் ஆயுத பயிற்சியின் போது மும்பையில் உயிரிழந்தார். இதனிடையே மோகன்ராஜ் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 29 Mar 2019, 2:13 pm
காட்பாடியை சேர்ந்த கடற்படை வீரர் மோகன்ராஜ் ஆயுத பயிற்சியின் போது மும்பையில் உயிரிழந்தார். இதனிடையே மோகன்ராஜ் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Samayam Tamil mohan


வேலூர் மாவட்டம் காட்பாடி லத்தேரி அடுத்த வேலம்பட்டு பகுதியை சேர்ந்த விவசாயி ராஜகோபாலன்- வள்ளி தம்பதி. இவர்களது மகன் மோகன்ராஜ் (22), மும்பை கடற்படை கப்பலில் 4 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், கோமதி என்ற போர்கப்பலில் நேற்று ஆயுத பயிற்சியில் ஈடுபட்டிருந்த மோகன்ராஜ் எதிர்பாராத விதமாக படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. சக வீரர்கள், அவரை உடனடியாக மீட்டு மும்பையில் உள்ள அஷ்வின் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு மோகன்ராஜின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக மோகன்ராஜின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே மோகன்ராஜின் சாவில் மர்மம் உள்ளதாக கூறி, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பணியின் போது மோகன்ராஜ் மட்டும் இறந்துள்ளது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துயுள்ளது என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

மோகன்ராஜ் உயிரிழந்த சம்பவம் அக்கிராம மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி