ஆப்நகரம்

வேலூரில் நடுரோட்டில் போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட சிறைகைதி!

தொரப்பாடி ஆண்கள் சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட விசாரணை கைதி, நடுரோட்டில் காவல்துறையினரிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 8 Mar 2019, 10:43 am
வேலூர் மாவட்டம், தொரப்பாடி ஆண்கள் சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட விசாரணை கைதி, நடுரோட்டில் காவல்துறையினரிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil vellore


வேலூர் மாவட்டம், தொரப்பாடி ஆண்கள் மத்திய சிறையில் பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, விசாரணை கைதியாக இருப்பவர் சரவணன் (எ) சுமைதாங்கி. இவரை நேற்று வழக்கு தொடர்பாக தொரப்பாடி ஆண்கள் மத்திய சிறையிலிருந்து, ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

ரத்தினகிரி அருகே வந்தபோது கைதி சரவணன், உடன் பாதுகாப்பிற்காக வந்த காவல்துறையினருடன், செல்போனில் தனது வீட்டிற்கு பேச வேண்டுமென கேட்டுள்ளார். ஆனால் காவல்துறையினர் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கைதி சரவணன் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் காவல்துறையின் வாகன கண்ணாடிகளையும் உடைத்துள்ளார். இதனால் அவரை மீண்டும் ரத்தினகிரி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தது, தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றது, காவல்துறையின் பேருந்தின் கண்ணாடியை உடைத்து ஆகியவைகளுக்காக மீண்டும் ஒரு வழக்குபதிவு செய்தனர். பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சரவணனை மீண்டும் வேலூர் தொரப்பாடி ஆண்கள் மத்திய சிறையில் அடைத்தனர்.

நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் வழியில் கைதி ரகளையில் ஈடுபட்டு காவல்துறை வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்து, மீண்டும் வழக்குபதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி