ஆப்நகரம்

மின்சார ரயில் மீது அறுந்து விழுந்த உயர்மின்னழுத்த கம்பி; வேலூர்-விழுப்புரம் ரயில் சேவை பாதிப்பு!

அறுந்து விழுந்த மின்கம்பியால், மின்சார ரயில் சேவை உடனடியாக நிறுத்தப்பட்டது.

TNN 30 Dec 2017, 10:35 am
சென்னை இரும்பிலியூரில் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. இது வேலூர் - விழுப்புரம் செல்லும்போது மின்சார ரயில் மீது விழுந்தது.
Samayam Tamil vellore to villupuram electric train stopped due to electric wire fell down
மின்சார ரயில் மீது அறுந்து விழுந்த உயர்மின்னழுத்த கம்பி; வேலூர்-விழுப்புரம் ரயில் சேவை பாதிப்பு!


அப்போது தீப்பொறி கிளம்பியுள்ளது. இதையடுத்து பயணிகள் அவசர அவசரமாக கீழே இறங்கினர். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மற்ற தண்டவாளங்களில் ரயில்கள் மிகவும் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

அறுந்த விழுந்த மின்கம்பியை சரிசெய்ய 2 மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்பதால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

ரயிலில் பயணித்த சுமார் 400 பயணிகள் ஆட்டோ, பேருந்துகளை பிடித்துச் செல்ல முயற்சித்து வருகின்றனர்.

Vellore to Villupuram electric train stopped due to electric wire fell down.

அடுத்த செய்தி