ஆப்நகரம்

சாத்தான்குளம் டூ காடாம்புலியூர்; நீளும் பட்டியல் - கொதிக்கும் வேல்முருகன்!

தமிழகத்தில் நீளும் காவல் மரணங்களின் பட்டியல் என்று வேல்முருகன் மிகவும் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

Samayam Tamil 12 Nov 2020, 1:19 pm
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் திடீரென உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. உடல்நலக் குறைவால் இருவரும் மருத்துவமனையில் உயிரிழந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் கஸ்டடி மரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் போலீசாரின் கஸ்டடியில் மிக மோசமாக துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் பலரும் கைது செய்யப்பட்டனர்.
Samayam Tamil Velmurugan


சாத்தான்குளம் கஸ்டடி மரணம் தொடர்பான விசாரணையை சிபிஐ கையிலெடுத்தது. பின்னர் கடந்த மாதம் 25ஆம் தேதி நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதேபோல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூரைச் சேர்ந்த முந்திரி வியாபாரி செல்வமுருகன், வடலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பண்ருட்டி கஸ்டடி மரணம்: இன்ஸ்பெக்டர் மீது கொலை வழக்கு பாயுமா? - நீதி தேடும் மனைவி

அங்கு போலீசாரால் துன்புறுத்தப்பட்டு உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து திருட்டு வழக்கில் தனது கணவரை தவறுதலாக கைது செய்து கொடூர கொலையை போலீசார் அரங்கேற்றி இருப்பதாக செல்வமுருகனின் மனைவி கடலூர் காவல் ஆணையருக்கு கடிதம் எழுதி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

மேலும் சென்னை உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், சாத்தான் குளம்- ஜெயராஜ், பென்னிக்ஸ் மற்றும் காடாம்புலியூர் செல்வம். நீளும் காவல் மரணங்களின் பட்டியல் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிகளவில் காவல் மரணங்கள் நிகழ்வது போல தெரிகிறது.

காவல் நிலையம் வரும் பொதுமக்களை முறையாக நடத்தாத காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தின் உத்தரவை சுட்டிக் காட்டியுள்ளார்.

அடுத்த செய்தி