ஆப்நகரம்

மதன் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

கைது செய்யப்பட்ட வேந்தர் மூவீஸ் மதனின் ஜாமீன் மனு மீதான விசராணை இன்று நடைபெறவுள்ளது.

TNN 23 Nov 2016, 8:53 am
Samayam Tamil vendhar movies madan bail plea probe today
மதன் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை
சென்னை: கைது செய்யப்பட்ட வேந்தர் மூவீஸ் மதனின் ஜாமீன் மனு மீதான விசராணை இன்று நடைபெறவுள்ளது.

மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி சுமார் 100-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து ரூ.74.39 கோடி வசூல் செய்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் வேந்தர் மூவிஸ் மதன். இந்த வழக்கு தொடர்பாக எஸ்ஆர்எம் குழும நிறுவனத் தலைவர் பச்சமுதுவும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஆனால், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மதன், தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார். மதனின் கூட்டாளிகளான குணா, சுதிர் உள்ளிட்ட 6 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திருப்பூரில் வைத்து மதனை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து நேற்று முன் தினம் கைது செய்தனர்.

திருப்பூரில் பிடிபட்ட மதனை சென்னை கொண்டு வந்த போலீசார், சென்னை எழும்பூர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தபடுத்தினர். அப்போது, நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட மதன் சார்பில் ஜாமீன் கோரி மனு அளிக்கப்பட்டது. அதேசமயம், மதனை விசாரிக்க கோரி குற்றப்பிரிவு போலீசாரும் மனு அளித்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, மதனை வருகிற டிசம்பர் மாதம் 2-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கவும், ஜாமீன் மனுவின் மீதான விசாரணை நவம்பர் மாதம் 23-ம் தேதி (இன்று) நடைபெறும் எனவும் உத்தரவிட்டார். அதனையடுத்து, சென்னை புழல் சிறையில் மதன் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், மதன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணையும், அவரை விசாரிக்க குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த மனுவும் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
Vendhar Movies Madan plea probe today

அடுத்த செய்தி