ஆப்நகரம்

தமிழ் படிக்க ஆசை: வெங்கையா நாயடு

பாரதி பெருவிழாவில் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தமிழ் படிக்க ஆசைப்படுவதாகக் கூறினார்.

TNN 10 Dec 2017, 5:39 pm
சென்னை: பாரதி பெருவிழாவில் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தமிழ் படிக்க ஆசைப்படுவதாகக் கூறினார்.
Samayam Tamil venkaiah naidu wants to learn tamil
தமிழ் படிக்க ஆசை: வெங்கையா நாயடு


வானவில் பண்பாட்டு மையத்தின் 24ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பாரதி பெருவிழா மயிலாப்பூரில் இன்று நடைபெற்றது. இதில் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்று பாரதி விருது வழங்கினார்.

இவ்விழாவில் முன்னாள் சிபிஐ இயக்குனர் கார்த்திகேயன் பாரதி விருதைப் பெற்றுக்கொண்டார். விழாவில் பேசிய வெங்கையா, தமிழ் கற்க தனக்கு ஆர்வம் இருப்பதாகவும் பாரதியார் பாடல்களை தேசிய பாட திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும் கூறினார்.

வேளாண் பல்கலைக்கழக விழாவிலும் பங்கேற்கும் வெங்கையா நாயுடு, பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு ஏர் அறிஞர் விருதை வழங்குகிறார்.

அடுத்த செய்தி