ஆப்நகரம்

குறைவான ஆதரவாளர்களுடன் நடந்த அதிமுக கூட்டம்? பின்னணி என்ன?

இன்று காலை 11 மணியளவில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெற்றது. ஓபிஎஸ், ஈபிஎஸ், ஜெயகுமார், செங்கோட்டையன், வளர்மதி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதில் கலந்துகொண்டனர். குறைவான ஆதரவாளர்களுடன் நடந்த அதிமுக கூட்டத்துக்கு காரணம் என்ன எனப் பார்ப்போம்.

Samayam Tamil 12 Jun 2019, 3:27 pm
இன்று காலை 11 மணியளவில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெற்றது. ஓபிஎஸ், ஈபிஎஸ், ஜெயகுமார், செங்கோட்டையன், வளர்மதி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.
Samayam Tamil a370ac5a-6519-4119-95fc-dd02990e769d

பின்னணி என்ன?

இதில் பல 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொண்டர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. தென் மாவட்டங்களில் இருந்து வந்த பெரும்பாலான தொண்டர்கள் ஜெயலலிதா ஆதரவாளர்களாகவே இருந்து வந்துள்ளனர்.

கட்சிக்குள் நடக்கும் உள் விவகாரங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. மேலும் கூட்டத்தில் முடிவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் பத்திரிகையாளர்களைச் சந்தித்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் செய்தியாளர்களைச் சந்திக்காமல் கிளம்பியது ஏமாற்றத்தை அளித்துள்ளது. கட்சியின் 4 எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது சிறு சலசலப்பை உண்டாக்கியது.

விரைவில் இடைத்தேர்தல் நடக்கவிருப்பதால் இக்கூட்டம் அதிமுகவுக்கு முக்கிய கூட்டமாக இருக்கும் என அனைத்து ஊடகங்களும் வரிசை கட்டி காத்திருந்தன. தொண்டர்கள் எண்ணிக்கையை காட்டிலும் செய்தியாளர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கும் போல இருக்கிறதே என சில கமெண்டுகள் ஆங்காங்கே பறந்தன. கூட்டத்திற்கு முன்னர் ஜெயகுமார் சில விஷயங்களை கூற அயத்தமானார். ஆனால் அவர் பாதியில் கூட்டத்துக்குச் சென்றுவிட்டார்.
ஆகமொத்தம் அந்த கூட்டத்தில் உருப்படியாக எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை என்பது தெளிவாகிறது. இது திமுகவுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

கூட்டத்தில் ஒருவர் எம்.ஜி.ஆர் போல வேடமணிந்து இருந்தார். ஒருவர் மத்தளம் தட்டிக்கொண்டு இருந்தார். மற்றொரு தொண்டர் ஜெயலலிதாவின் போஸ்டரைக் கண்டு பயபக்தியுடன் வணங்கிக் கொண்டு இருந்தார். கிட்டத்தட்ட இவர்கள் அனைவருமே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மீது கொண்ட பற்று காரணமாகவே வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை வந்திருந்தனர். ஆக, ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் நம்பிக்கை இல்லாமல் பழைய தலைவர்களின் ஆதரவாளர்கள் வந்தது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவே கூட்டம் குறைய முக்கியக் காரணம் என கூறப்படுகிறது.

அடுத்த செய்தி