ஆப்நகரம்

25 ஆண்டுகளாக சம்பள உயர்வில்லை... கால்நடை மருத்துவர்கள் போராட்டம்

நெல்லை : கால்நடை மருத்துவர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

TNN 14 Jun 2017, 11:07 am
நெல்லை : கால்நடை மருத்துவர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil veterinary doctors protest in tirunelveli
25 ஆண்டுகளாக சம்பள உயர்வில்லை... கால்நடை மருத்துவர்கள் போராட்டம்


பதவி உயர்வு, சம்பள விகிதாச்சாரம் தொடர்பான கடந்த பிப்ரவரி வெளியிட்ட அரசாணை 49ஐ நிறுத்தி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் இன்று திருநெல்வேலியில் நடைப்பெற்று வருகின்றது. 25 ஆண்டுகளாக ஒரே பதவி மற்றும் ஒரே ஊதியம் வழங்கப்படுவதை கண்டித்து தங்கள் ஆதங்கத்தை காட்டவே இந்த ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் என தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்ட மருத்துவர்களில் காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை விடுத்து, நெல்லையில் 100க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவமனைகளில் இன்று மருத்துவர்கள் பணியாற்றவில்லை.

105 மருத்துவமனைகளில் 85 மருத்துவர்கள் உள்ள நிலையில், இன்று யாரும் பணிக்கு செல்ல வில்லை. அவசர தேவைக்கு கால்நடை ஆய்வாளர்கள், முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர்கள் பணியில் இருப்பர்கள் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி