ஆப்நகரம்

விஹிப செயலாளர் கொலை : ஓசூரில் கடைகள் அடைப்பு

ஓசூரை சேர்ந்த விஸ்வ ஹிந்து பரிஷத் செயலாளர் சூரி என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஓசூரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது.

TOI Contributor 20 Sep 2016, 1:07 pm
கிரிஷ்ணகிரி : ஓசூரை சேர்ந்த விஸ்வ ஹிந்து பரிஷத் செயலாளர் சூரி என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஓசூரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது.
Samayam Tamil vhp functionarys murder shops remain closed in hosur
விஹிப செயலாளர் கொலை : ஓசூரில் கடைகள் அடைப்பு


சூரி நேற்று நேரு நகரில் உள்ள தனது ரியல் எஸ்டேட் அலுவலகத்தின் முன்பு இரண்டு நபர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த அடையாளம் தெரியாத 3 நபர்கள் சூரியை சூழ்ந்து கொண்டு கொலைசெய்து தப்பி ஓடிவிட்டனர். சூரியின் உடலை விஹிப, பாஜக, மற்றும் மற்ற ஹிந்து அமைப்புகள் சேர்ந்து மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலைக்கான காரணம் என்ன வென்று தெரியவில்லை.
இதையடுத்து, ஒசூரில் பதற்றமான சூழல் நிழவுகிறது. இது தொடர்பாக மோதல் மற்றும் கல்வீச்சு சம்பவங்கள் எதுவும் நடக்காமல் தடுப்பதற்காக 700க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கடைகள் மற்றும் வர்த்தக் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட டிஐஜி பி நாகராஜன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டஎஸ்பி டி மகேஷ் குமார் மற்றும் பல போலீஸ் அதிகாரிகள் நிலைமையை கட்டுக்குள் வைக்க முகாமிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி