ஆப்நகரம்

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம்: விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்

பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பாக உயர் கல்வித்துறை செயலாளர், ஆளுநர் செயலாளர், பல்கலைக்கழக மானிய குழு ஆகியவை பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 18 May 2017, 12:55 pm
சென்னை: பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பாக உயர் கல்வித்துறை செயலாளர், ஆளுநர் செயலாளர், பல்கலைக்கழக மானிய குழு ஆகியவை பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil vice chancellors appointment case chennai hc seeks explanation
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம்: விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்


தமிழகத்தில் மிக முக்கியமான பல்கலைக்கழகமாக இருப்பது அண்ணா பல்கலைக்கழகம். இதன் அதிகாரத்தின் கீழ் தமிழ்நாட்டில் மொத்தம் 527 கல்லூரிகள் இருக்கின்றன. அதேபோல், தமிழ்நாட்டின் முக்கிய பல்கலைக்கழகங்களாக சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் போன்றவையும் திகழ்கிறது. ஆனால், இந்த பல்கலைக்கழகங்கள் பல மாதங்களாகவே துணைவேந்தர்கள் இல்லாமல் இயங்கி வருகின்றன.

இத்தகைய சூழலில், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் சட்டப் பல்கலைக்கு உடனடியாக துணை வேந்தரை நியமிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. பெரியார், பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர் நியமிப்பதற்கான குழுவை உடனடியாக நியமிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நடத்திய நீதிமன்றம், உயர் கல்வித்துறை செயலாளர், ஆளுநர் செயலாளர், பல்கலை கழக மானிய குழு ஆகியவை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், துணை வேந்தர் இல்லாமல், நாளை நடைபெற உள்ள அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று வழங்கும் என தெரிகிறது.
Vice Chancellors appointment case: Chennai HC seeks explanation

அடுத்த செய்தி