சென்னை: ‘பாரதி’ விருதை சிபிஐ முன்னாள் இயக்குநருக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார்.
வானவில் பண்பாட்டு மையத்தின் ஆண்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வந்துள்ளார்.
அவரை தமிழக ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் வரவேற்றனர். பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அங்கு மத்திய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயனுக்கு ‘பாரதி’ விருது வழங்கி கௌரவித்தார்.
இதையடுத்து பேசிய அவர், பாரதியாரின் பாடல்கள், கருத்துகள் தேசிய அளவில் பாட திட்டத்தில் இடம் பெற வேண்டும். மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வு கூடாது என்ற பாரதியின் பாடல்களை அனைவரும் அறிய வேண்டும்.
அனைவரும் முயற்சி செய்தால் பாரதி கண்ட புதுமை தேசத்தை அடையலாம். தமிழ்நாடு எனக்கு நெருக்கமான ஒன்று என்று கூறினார்.
Vice President Venkaiah Naidu gives Bharathi award to CBI former director.
வானவில் பண்பாட்டு மையத்தின் ஆண்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வந்துள்ளார்.
அவரை தமிழக ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் வரவேற்றனர். பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அங்கு மத்திய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயனுக்கு ‘பாரதி’ விருது வழங்கி கௌரவித்தார்.
இதையடுத்து பேசிய அவர், பாரதியாரின் பாடல்கள், கருத்துகள் தேசிய அளவில் பாட திட்டத்தில் இடம் பெற வேண்டும். மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வு கூடாது என்ற பாரதியின் பாடல்களை அனைவரும் அறிய வேண்டும்.
அனைவரும் முயற்சி செய்தால் பாரதி கண்ட புதுமை தேசத்தை அடையலாம். தமிழ்நாடு எனக்கு நெருக்கமான ஒன்று என்று கூறினார்.
Vice President Venkaiah Naidu gives Bharathi award to CBI former director.