ஆப்நகரம்

புழல் சிறையில் செல்பேன்கள்- டி.ஐ.ஜி வீட்டில் சோதனை!

சென்னை: டி.ஐ.ஜி முருகேசன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Samayam Tamil 21 Sep 2018, 2:42 pm
சென்னை புழல் சிறையில் கைதிகள், சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக புகைப்படங்கள் வெளியாகின. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் புழல் சிறையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதில் 20 டிவி, செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Samayam Tamil 7


இதையடுத்து சலுகைகள் வழங்கிய 17 சிறை வார்டன்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தமிழகம் முழுதும் மத்திய சிறைகளில் கைதிகளுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறதா என சோதனைகள் நடக்கிறது.

இந்நிலையில் சிறை வளாகத்தில் உள்ள டி.ஐ.ஜி முருகேசன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி