Please enable javascript.vijay fans:புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள்..குவியும் பாராட்டு..!

Vijay fans: புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள்..குவியும் பாராட்டு..!

Authored byS வினோத்குமார் | Samayam Tamil 5 Dec 2023, 4:44 pm
Subscribe

சென்னையில் மிக்ஜாம் புயலால் கனமழை பெய்து வருகின்றது. கனமழை காணமாக சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தளபதி விஜய்யின் ரசிகர்கள் உணவளித்து உதவி செய்து வருகின்றனர்

விஜய்
மிக்ஜாம் புயலால் சென்னை உட்பட திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி தீர்த்த பின் தற்போது தான் சற்று மழை ஓய்ந்துள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மையம் வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலால் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் வரலாறு காணாத மழை பெய்தது.


ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சென்னையில் மழை பெய்தது. இதன் காரணமாக சென்னை முழுக்க வெள்ளக்காடாக மாறியது. எங்கு திரும்பினாலும் தண்ணீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. வீட்டிற்கு வெளியே தேங்கிய தண்ணீர் மெல்ல மெல்ல வீடுகளுக்குள்ளும் புகுந்தது.

Chennai rains: புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கிய அமைச்சர்கள்..!

இதனால் தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முதல் மற்ற அமைச்சர்கள் அனைவரும் நேரடியாக களத்தில் இறங்கி மக்களின் குறையை கேட்டறிந்து அவர்களுக்கு போதிய உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் மழை குறைந்துள்ளதால் மழை நீரை வடிகட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.


பெரும்பாலான இடங்களில் மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டது. எனவே போக்குவரத்து தடையின்றி செயல்பட்டும், மின் விநியோகம் மீண்டும் துவங்கியும் உள்ளது. மெல்ல மெல்ல சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் விஜய்யின் ரசிகர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது. தண்ணீரால் சூழ்ந்துள்ள பகுதிகளில் விஜய் ரசிகர்கள் படகுகளின் மூலம் உணவை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்த செயலை பார்த்த பலரும் விஜய் ரசிகர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.




இந்த இரண்டு நாட்களில் மழை காரணமாக உணவு கிடைப்பது மிகவும் கஷ்டமான காரியமாக மாறிவிட்டது. சில இடங்களில் மழை நீர் வீட்டிற்குள் புகுந்ததால் அவர்களால் சமைக்கமுடியாமல் போனது. உணவகங்களும் மூடப்பட்டதால் உணவு இன்றி பலர் தவித்து வந்தனர். அந்த சமயத்தில் விஜய் ரசிகர்கள் அவர்களின் இல்லத்திற்கே சென்ன்று உணவு வழங்கி விருதை பொதுமக்கள் அனைவரும் வரவேற்று பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
S  வினோத்குமார்
எழுத்தாளர் பற்றி
S வினோத்குமார்
வினோத் குமார். நான் பொறியியல் மற்றும் ஊடகவியல் பட்டப்படிப்பை படித்துள்ளேன்.கடந்த நான்கு ஆண்டுகளாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகினறேன். சினிமா மீது அதீத ஆர்வம் கொண்ட நான் தற்போது times internet சமயம் தமிழில் சினிமா தொடர்பான விஷயங்களை எழுதும் sub editor ஆக பணியாற்றி வருகின்றேன்.... மேலும் படிக்க
உங்கள் கருத்தை பதிவு செய்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்