ஆப்நகரம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் நேரில் ஆறுதல்!!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நடிகர் விஜய் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

Samayam Tamil 6 Jun 2018, 7:17 am
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நடிகர் விஜய் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
Samayam Tamil De-CrpOV4AAIkvu


கடந்த மாதம், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில், போலீசார் பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இதில், 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதைத் தொடர்ந்து, கமல்ஹாசன், முக ஸ்டாலின் மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்டோர், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினர். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவியும் அளித்தனர்.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய், நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் பாதிக்கப்பட்டவர்களின் இல்லங்களுக்கு சென்று, அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அளித்துள்ளார்.

இந்தச் திடீர் சந்திப்பு, ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ஆச்சர்யத்தை அளித்தது. இன்று, நடிகர் விஜய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களை நேரில் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி