ஆப்நகரம்

தமிழை ஆங்கிலத்தில் எழுதி, டப்பிங் பேசும் விஜய் யேசுதாஸ்!

நடிகர் விஜய் யேசுதாஸ் தமிழ் வசனங்களை ஆங்கிலத்தில் எழுதி வைத்துக் கொண்டு தமிழில் டப்பிங் பேசி வருகிறார்.

TNN 7 Mar 2017, 6:39 pm
நடிகர் விஜய் யேசுதாஸ் தமிழ் வசனங்களை ஆங்கிலத்தில் எழுதி வைத்துக் கொண்டு தமிழில் டப்பிங் பேசி வருகிறார்.
Samayam Tamil vijay yesudas uses transliteration for dubbing
தமிழை ஆங்கிலத்தில் எழுதி, டப்பிங் பேசும் விஜய் யேசுதாஸ்!


நடிகர் விஜய் யேசுதாஸ், பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘மாரி’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். தற்போது விஜய் ‘படைவீரன்’ படத்தை இயக்கி, ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படத்திலும் போலீசாக நடித்துள்ளார்.

மேலும் படத்தில் பாரதிராஜா, அகில், அமிர்தா உள்பட பலர் நடித்துள்ளனர்.மேலும், இந்த படத்தில் நடிக்கும்போது தமிழ் வார்த்தைகளை சரியாக உச்சரிக்க முடியாமல் ரொம்பவே கஷ்டப்படுகிறாராம் விஜய் யேசுதாஸ். பிரபல பின்னணி பாடகரான கே.ஜே.யேசுதாஸின் மகனான அவர், பிறந்தது சென்னையில் என்றாலும், பின்னர் கேரளா சென்று விட்டதால் அவருக்கு இன்னும் தமிழை சரிவர பேச முடியவில்லையாம்.

இருந்தாலும், ‘மாரி’ படத்தில் தனக்குத்தானே டப்பிங் பேசிய விஜய் யேசுதாஸ், இந்த ‘படைவீரன்’ படத்திலும் டப்பிங் பேசியுள்ளார். முன்னதாக, தான் பேசவேண்டிய தமிழ் வசனங்களை ஆங்கிலத்தில் எழுதி வைத்துக்கொண்டு பேச பயிற்சி எடுத்து தமிழில் டப்பிங் பேசியிருக்கிறார் விஜய் யேசுதாஸ்.

அடுத்த செய்தி