ஆப்நகரம்

தேமுதிகவில் நுழைந்தது மாமா சுதீஷுக்கு பிடிக்க வில்லையா? விஜய பிரபாகரன் விளக்கம்!

சென்னை: மாமா சுதீஷ் மீதான குற்றச்சாட்டிற்கு விஜய பிரபாகரன் விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 25 Dec 2018, 4:08 pm
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், வடசென்னை மாவட்டத்திற்கு சென்றார்.
Samayam Tamil VIjaya Prabakaran


அங்கு பிரார்த்தனை செய்த பின், ஏழை மக்கள், குழந்தைகளுக்கு பிரியாணி, கேக் உள்ளிட்டவற்றை அளித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது தந்தை அமெரிக்காவில் இருக்கிறார்.

அங்கிருந்த படியே கிறிஸ்துமஸ் தினத்தை சிறப்பாக கொண்டாட ஆணை பிறப்பித்துள்ளார். அதன்படி வடசென்னை மாவட்ட செயலாளர் மதிவாணன் உடன், சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள். நாடாளுமன்ற தேர்தல் தேதி வந்த பிறகே, தேமுதிக செயல்பாடு குறித்து தெரிவிக்க முடியும். என்னை பள்ளி, கல்லூரி சேர்த்து விட்டது எனது மாமா சுதீஷ்.

அவர் தான் அரசியலுக்கும் வரவழைத்தார். எனது பணியில் அவர் எந்தவொரு முட்டுக்கட்டையும் போடவில்லை. கட்சி தலைமை விரும்பினால் நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறினார்.

அடுத்த செய்தி