ஆப்நகரம்

துப்பாக்கி கலாச்சாரம்: விஜயகாந்த் வேதனை

தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் தலை தூக்கியுள்ளது வருத்தமளிக்கிறது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.

TNN 13 Oct 2016, 4:03 pm
சென்னை: தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் தலை தூக்கியுள்ளது வருத்தமளிக்கிறது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil vijayakanth concern about gun culture in tn
துப்பாக்கி கலாச்சாரம்: விஜயகாந்த் வேதனை


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இதுவரை இல்லாத துப்பாக்கி சூடு கலாச்சாரம் தலை தூக்க ஆரம்பித்துள்ளது வேதனையளிக்கிறது. இது நாம் தமிழகத்தில் தான் உள்ளோமா என்ற பீதியை மக்களிடையே கிளப்பியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பகையை வளர்க்காமல் மக்கள் நட்பு உணர்வோடு வாழ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள அவர், இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடக்கா வண்ணம் அரசு துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சாத்தூர் அருகே ஓடும் பேருந்தில் கருப்பசாமி என்ற இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் இது போன்று தெரிவித்துள்ளார்.

Vijayakanth concern about Gun culture in TN #GunCulture #DMDK #Vijakanth

அடுத்த செய்தி