ஆப்நகரம்

பற்ற வைத்த விஜயகாந்த்; மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்?

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக அரசுக்கு தந்துள்ள புதிய ஆலோசனை மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

Samayam Tamil 27 Dec 2022, 7:53 pm
சீனாவில் பரவி வரும் பிஎஃப்.7 கொரோனா வைரஸ் உலக நாடுகள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக்கூட்டத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் கலந்து கொண்டு தங்களது ஆலோசனையை வழங்கின.
Samayam Tamil tn lockdown 2023


இந்த நிலையில், பிஎஃப்.7 கொரோனா வைரஸ் தொடர்பாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்துரையாடியபோது, ‘மாநிலங்கள் விழிப்புடன் இருப்பதோடு, கொரோனாவை கட்டுப்படுத்த தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இதற்கு முன்பு கொரோனா பரவலை தடுக்க பணியாற்றியது போலவே தற்போதும் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். கொரோனா கண்காணிப்புகளை தீவிரப்படுத்தி சோதனையை அதிகப்படுத்த வேண்டும். மருத்துவமனை உட்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

கொரோனா.. முதல்வர் அதிரடி உத்தரவு; அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
இந்த நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர், தலைவர் விஜயகாந்த் தமிழக அரசுக்கு தந்து இருக்கும் சூப்பர் ஐடியா பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

சீனாவில் கடந்த 2020ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகத்தையே ஆட்டி படைத்தது. லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது. இந்தியாவில் 3 அலைகளாக மிரட்டிய கொரோனா வைரஸ் வைரசால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றிலும் முடங்கியது.

கொரோனாவில் இருந்து மீண்டு உலக மக்கள் சகஜ நிலைக்கு படிப்படியாக திரும்பி வரும் நிலையில் சீனாவில் பி.எப்.7 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது.

யாருடன் கூட்டணி? எடப்பாடி தடாலடி; அதிமுக-பாஜக வட்டாரத்தில் பரபரப்பு!
இந்த கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. பி.எப்.7 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் சிலரை பாதித்து இருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவும் என எச்சரிக்கப்பட்டு உள்ளதால் பொது மக்களும் அலட்சிய போக்குடன் இல்லாமல் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

தற்போது புத்தாண்டு போன்ற பண்டிகைகள் வருவதால் பொது மக்கள் அதிக அளவில் ஒன்று கூடுவதை தவிர்த்து, சமூக இடைவெளியை பின்பற்றி பண்டிகைகளை தங்களுடைய குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும்.

கலெக்டரின் அந்த 6 நிமிடங்கள்; அதிர்ச்சியில் பொதுமக்கள்!
இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும்.

மேலும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை தவிர பொது மக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை சானிடைசர் மூலம் சுத்தம் செய்வது போன்ற கொரோனா வழிக்காட்டு முறைகளை மீண்டும் நடை முறைப்படுத்த தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் நிறுவனர், தலைவர் விஜயகாந்த் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கேட்டுக் கொண்டு உள்ளார். கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதாக கூறப்படும் நிலையில் விஜயகாந்த் விடுத்து உள்ள இந்த கோரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மீண்டும் லாக்டவுன் அலம்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

அடுத்த செய்தி