ஆப்நகரம்

போலீஸ் தாக்குதல் நடத்தியது குறித்து விஜயகாந்த் பேட்டி

சென்னை : வன்முறையால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி விஜயகாந்த் பேசினார்.

TNN 30 Jan 2017, 6:50 pm
சென்னை : வன்முறையால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி விஜயகாந்த் பேசினார்.
Samayam Tamil vijayakanth in nadukuppam
போலீஸ் தாக்குதல் நடத்தியது குறித்து விஜயகாந்த் பேட்டி


ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கடந்த திங்கள் கிழமை போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல கூறினர். அப்போது கடலுக்கு அருகில் சென்று போராடினர். அந்நேரத்தில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உதவி செய்தனர்.

இதைத் தொடர்ந்து மெரினா பகுதியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின் போது மீனவர்கள் அதிகம் வசிக்கும் நடுக்குப்பத்தில் பல இடங்கள் தீயில் கருகியது. இதனால் அப்பகுதியினருக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பல அரசியல் தலைவர்கள் அப்பகுதியை பார்வையிட்டு, அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில் நடுக்குப்பத்திற்கு சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் ஆய்வு செய்தார்.

அதோடு மீனவர்களுக்கு தேவையான அடிப்படை பொருட்களை நிவாரணமாக வழங்கினார்.

விஜயகாந்த் பேசியதாவது:
சென்னை வன்முறையில் ஈடுபட்ட சமூக விரோத கும்பலை காவல்துறையினர் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களுக்கு அரசு உதவ வேண்டும்.

அடுத்த செய்தி