ஆப்நகரம்

7 பேரையும் வெளியே விடுங்க: கேப்டன் விஜய்காந்த் அறிக்கை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க வேண்டுமென தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

Samayam Tamil 12 Sep 2018, 4:37 pm
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க வேண்டுமென தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
Samayam Tamil vijaya-kanth


இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜய்காந்த இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டதை என்றைக்கும், யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றாலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்கும் விவகாரத்தில், இன்னும் காலம் தாழ்த்தி அரசியல் நடத்தாமல் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கும்படி பரிந்துரைக் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, தமிழக அரசு ஆளுநருக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி