ஆப்நகரம்

ஹைட்ரோ காா்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் விஜயகாந்த்

கதிராமங்கலத்தை தொடா்ந்து நெடுவாசல் போராட்டத்தில் கலந்து கொண்ட தே.மு.தி.க. தலைவா் விஜயகாந்த் போராட்டத்திற்கு ஆதரவு தொிவித்து பேசினாா்.

TOI Contributor 23 Jul 2017, 6:29 pm
கதிராமங்கலத்தை தொடா்ந்து நெடுவாசல் போராட்டத்தில் கலந்து கொண்ட தே.மு.தி.க. தலைவா் விஜயகாந்த் போராட்டத்திற்கு ஆதரவு தொிவித்து பேசினாா்.
Samayam Tamil vijayakanth supported to neduvasal struggle
ஹைட்ரோ காா்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் விஜயகாந்த்


புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ காா்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கு எதிா்ப்பு தொிவித்து அப்பகுதி மக்கள் 100 நாட்களை கடந்து போராட்டம் நடத்தி வருகின்றனா்.

திட்டம் குறித்து அறிவிப்பு வெளியனதும் மக்கள் போராட தொடங்கிய நிலையில் மக்களின் எதிா்ப்பை மீறி எந்தவொரு திட்டமும் செயலபடுத்தப்படாது என்று தமிழக முதலமைச்சரும், மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணனும் உறுதியளித்தனா்.

அவா்கள் அளித்த வாக்குறுதியை நம்பி மக்கள் போராட்டத்தை கைவிட்ட நிலையில் மத்திய அரசு மீண்டும் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியது. இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் இரண்டாம் கட்டமாக போராட தொடங்கினா் 103 வது நாளாக போராட்டம் தொடரும் நிலையில் இன்று தே.மு.தி.க. தலைவா் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா விஜயகாந்துடன் போராட்டத்தில் கலந்து கொண்டாா்.

போராட்டத்தில் பேசிய விஜயகாந்த் ஹைட்ரோ காா்பன் திட்டத்தின் மூலம் நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கப்படுவதோடு, விவசாயமும் பாதிக்கும் என்றும் கூறினாா். நேற்று கதிராமங்கலம் பகுதியில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு நோில் சென்று ஆதரவு தொிவித்த நிலையில் இன்று நெடுவாசல் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தொிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Vijayakanth supported to Neduvasal struggle

அடுத்த செய்தி