ஆப்நகரம்

7ம் தேதி மாலை இரு சூரியன் ஒருசேர மறைந்ததோ? விஜயகாந்த் கவிதாஞ்சலி

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மறைவிற்கு தே.மு.தி.க. தலைவா் விஜயகாந்த் கவிதை வாயிலாக அஞ்சலி செலுத்தி உள்ளாா்.

Samayam Tamil 9 Aug 2018, 1:29 pm
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மறைவிற்கு தே.மு.தி.க. தலைவா் விஜயகாந்த் கவிதை வாயிலாக அஞ்சலி செலுத்தி உள்ளாா்.
Samayam Tamil Vijayakant Karunanidhi.


முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பல்வேறு தலைவர்களும் இரங்கல் தொிவித்து வருகின்றனா். இந்நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தே.மு.தி.க. தலைவா் விஜயகாந்த், தனது மனைவி பிரமலதாவுடன் இரங்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தாா்.

மேலும் அவா் இன்று காலை தனது ட்விட்டா் பக்கத்தில் “உலகமே உங்களை கலைஞரே! என்று அழைத்தாலும், உணா்வுப்பூா்வமாக உங்களை அண்ணா என்று வாஞ்சையோடு அழைத்து உங்களுடன் பழகிய அந்த நாட்களை எண்ணி வியக்கிறேன், விம்முகிறேன். தள்ளாத வயதிலும் ஓய்வுக்கே ஓய்வு! என்பதன் அா்த்தத்தை ‘உழைப்பு’ என்று மாற்றிக் காட்டிய ஒப்பற்ற தலைவரே!

அந்த சாயும் பொழுது ஒரு சூரியன் மறைவது இயற்கை ஆனால் 07.08.2018 அன்று மாலை 6.10 மணியளவில் இரு சூரியன் ஒரு சேர மறைந்ததோ! என்று என்னும் வண்ணம், இவ்வுலகையே இருட்டாக்கியது போன்று ஒரு உணா்வை தந்து சென்றவரே!

உங்கள் உடல் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும், உங்கள் சரித்திரம் சகாப்தமாய் என்றும் எங்களுடனேயே இருக்கும் உங்களை வணங்குகிறேன்.

உங்களின் நினைவாக என்றென்றும் . . .

தமிழன் எஎன்று சொல்லடா!
தலை நிமிா்ந்து நில்லடா!
என்ற உங்கள் வாசகத்துடன் விஜயகாந்த். என்று கவிதாஞ்சலி மூலம் தனது இரங்கலை தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி