டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு விதித்த தடையை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்றுள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன என்று டிக்டாக், ஹலோ, ஷேர் இட் , யூசி பிரௌசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதற்கு முன்பு பலமுறை டிக்டாக்கைத் தடை செய்ய வேண்டும் என்று சட்டமன்றங்களில் விவாதங்கள் நடந்துள்ளன. இந்நிலையில், நேற்று அறிவிக்கப்பட்ட தடை உத்தரவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர். அந்தவகையில், தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் இது தொடர்பாகத் தனது ஆதரவை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மருத்துவக் கழிவுகளிலும் கணக்கு உதைக்கிறது: பூவுலகின் நண்பர்கள் குற்றச்சாட்டு!
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ல சுட்டுரையில் (ட்வீட்), “கலாச்சார சீரழிவு, தேசிய பாதுகாப்பு & இறையாண்மைக்கு கேடு விளைவிக்கக்கூடிய டிக்டாக், ஷேரிட், ஹலோ, உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது வரவேற்கதக்கது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இது சீனாவுக்கு எதிரான பதிலடி என்று பலரும் பேசி வரும் நிலையில், சீனாவிலும் இந்திய நாளேடுகளின் வலைதளப் பக்கங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன என்று டிக்டாக், ஹலோ, ஷேர் இட் , யூசி பிரௌசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதற்கு முன்பு பலமுறை டிக்டாக்கைத் தடை செய்ய வேண்டும் என்று சட்டமன்றங்களில் விவாதங்கள் நடந்துள்ளன. இந்நிலையில், நேற்று அறிவிக்கப்பட்ட தடை உத்தரவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர். அந்தவகையில், தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் இது தொடர்பாகத் தனது ஆதரவை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மருத்துவக் கழிவுகளிலும் கணக்கு உதைக்கிறது: பூவுலகின் நண்பர்கள் குற்றச்சாட்டு!
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ல சுட்டுரையில் (ட்வீட்), “கலாச்சார சீரழிவு, தேசிய பாதுகாப்பு & இறையாண்மைக்கு கேடு விளைவிக்கக்கூடிய டிக்டாக், ஷேரிட், ஹலோ, உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது வரவேற்கதக்கது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இது சீனாவுக்கு எதிரான பதிலடி என்று பலரும் பேசி வரும் நிலையில், சீனாவிலும் இந்திய நாளேடுகளின் வலைதளப் பக்கங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.