ஆப்நகரம்

ரேஷன் பொருட்களின் விநியோகத்தை சரிசெய்க: விஜயகாந்த்

தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில், அரசு உடனடியாக கவனம் செலுத்தி, பாதிக்கப்பட்ட ரேஷன் பொருட்களின் விநியோகத்தை சரிசெய்ய வேண்டும்.என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த கூறியுள்ளார்.

TNN 16 Oct 2016, 3:11 pm
சென்னை : தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில், அரசு உடனடியாக கவனம் செலுத்தி, பாதிக்கப்பட்ட ரேஷன் பொருட்களின் விநியோகத்தை சரிசெய்ய வேண்டும்.என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த கூறியுள்ளார்.
Samayam Tamil vijayakath statement about ration issue
ரேஷன் பொருட்களின் விநியோகத்தை சரிசெய்க: விஜயகாந்த்


இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் பன்னிரெண்டு நாட்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் ரேஷன் பொருட்களின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பொது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாமாயில், பருப்பு வகைகள், மண்ணெண்ணெய் போன்ற பல்வேறு பொருட்கள் முன்னறிவிப்பின்றி விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது வேதனைக்குரியது. அதேபோல் விநியோகிக்கப்படும் அரிசியம் தரமில்லாமல் புழு பூச்சிகள் நிறைந்தும், சாப்பிட பயன்படுத்த முடியாத நிலையில் தரமில்லாத அரிசி வழங்கபடுவதாகவும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மக்கள் குறை கூறி வருகின்றனர்.

உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவி காலம் விரைவில் முடிய உள்ள நிலையில், புதிதாக அதிகாரிகளை உடனடியாக நியமித்து இதுபோன்ற அடிப்படை தேவைகளை கவனிக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில், #அரசு உடனடியாக கவனம் செலுத்தி, பாதிக்கப்பட்ட #ரேஷன் பொருட்களின் விநியோகத்தை சரிசெய்ய வேண்டும். pic.twitter.com/EIMULTGD6o — Vijayakant (@iVijayakant) October 16, 2016

அடுத்த செய்தி