ஆப்நகரம்

விக்கிரவாண்டி: தொரவி கிராமத்தில் வாக்குபதிவு தொடங்க தாமதம்!

விக்கிரவாண்டி தொகுதி தொரவி கிராமத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.

Samayam Tamil 21 Oct 2019, 8:48 am
தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியிலிருந்து தொடங்கி நடைபெற்றுவருகிறது.
Samayam Tamil Untitled collage (6)


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கி பெய்துவருகிறது. இன்றும் தமிழ்நாடு, புதுச்சேரியில் பெரும்பலான இடங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது பல்வேறு இடங்களில் கன மழை பெய்துவருகிறது. வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களிலும் மழை பெய்துவருவதால் வாக்குப்பதிவு சதவீதம் சற்று குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பல இடங்களில் மழைக்கு முன்பாகவே வாக்குகளை செலுத்த மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

மூன்று மாவட்ட மாணவர்கள் ஜாலி மோட்: கலெக்டர்கள் விடுமுறை அறிவிப்பு!

விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள தொரவி கிராமத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தடை பட்டது. இதனால் காலையிலேயே வாக்குப்பதிவுசெய்ய ஆர்வமாக வந்த மக்கள் நீண்ட வரிசையில் 45 நிமிடங்களுக்கும் மேல் காத்திருந்தனர்.

மகாராஷ்டிராவில் 288, அரியானாவில் 90; விறுவிறுப்பாக தொடங்கிய சட்டமன்ற தேர்தல்!

பின்னர் அதிகாரிகள் வேறு வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கொண்டுவந்து வாக்குப்பதிவை தொடங்கினர். 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் விக்கிரவாண்டி தொகுதியில் 80 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. ஆனால் தற்போது மழை காலமாக இந்த வாக்குப்பதிவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி