ஆப்நகரம்

அக்., 2ல் கிராமசபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி!

அக்டோபர் 2ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது

Samayam Tamil 20 Sep 2021, 4:49 pm

ஹைலைட்ஸ்:

  • வரும் அக்டோபர் 2 ஆம் தேதி கிராமசபை கூட்டம் நடத்தலாம்
  • தமிழக அரசு அனுமதி
  • தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் நடத்த தடை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil TN Govt
தமிழகத்தில், வரும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, கிராமசபைக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், ஆண்டுதோறும் சுதந்திர தினம், குடியரசு தினம், உழைப்பாளர் தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய முக்கிய தினங்களில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா பாதிப்பின் காரணமாக, கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகும், கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், வரும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி, காந்தி ஜெயந்தி தினத்தன்று பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால், அந்த மாவட்டங்களை தவிர்த்து, பிற மாவட்டங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஹேப்பி நியூஸ்!
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
திறந்தவெளியில் கூட்டத்தை நடத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கிராமப் பஞ்சாயத்துக்கு வழங்க வேண்டும். கூட்டம் நடத்துவதற்கு முன்பு, அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும்.
14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது. கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு ஏற்றாற்போல இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அடுத்த செய்தி