ஆப்நகரம்

சைவ உணவு மட்டுமே சாப்பிடும் வித்தியாசமான கிராமம்!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தினர் அனைவருமே சைவ உணவை மட்டுமே உட்கொண்டு வரும் சுவாரசிய சம்பவம் நிகழ்ந்து வருகிறது.

Samayam Tamil 14 Sep 2018, 6:09 pm
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தினர் அனைவருமே சைவ உணவை மட்டுமே உட்கொண்டு வரும் சுவாரசிய சம்பவம் நிகழ்ந்து வருகிறது.
Samayam Tamil shutterstock_120185890


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வாடிமனைப்படி என்ற கிராமத்தில் சுமார் 50குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்தில் வசித்து வரும் பொதுமக்கள்கடந்த1963- ஆம் ஆண்டிற்குமுன்னர் சைவம்அசைவம் என்று அனைத்துஉணவுகளையும் சாப்பிட்டு வந்துள்ளனர்.

1963 ஆம் ஆண்டு கிராமத்திற்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க சங்கத்திலிருந்து வந்த முத்தையா என்ற சாமியார்,மாமிசம் உண்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்குவிளக்கி கூறியுள்ளார். அதிலிருந்துஅந்த கிராம மக்கள்சைவத்திற்குமாறியுள்ளனர்.கிராமத்தில் கோழி, ஆடு வளர்த்தால்சைவம் சாப்பிடும் ஆசை வந்துவிடும் என்பதற்காக ஆடு, கோழி வளர்ப்பதைகைவிட்டனர்.

பசு மாடுகள் மட்டும் வளர்கின்றனர். கண்மாயில் மீன் வளர்த்தாலும் அவற்றை அவர்கள் பிடிப்பது இல்லை.மேலும் இந்த கிராமத்தில் யாரும் மது அருந்தமட்டார்கள். இளைஞர்கள் முதல் பெரியவர்கள்வரை இங்கே யாரும் டாஸ்மார்க் கடைக்குசெல்ல மாட்டார்கள்.

இந்த ஊர் ஆண்களை திருமணம் செய்யும் பெண்கள்அசைவமாக இருந்தால் திருமணமான பிறகு சைவமாக மாறி விடுகிறார்கள்.மேலும் இவர்கள் திருமணத்தில், சாதாரண திருமணத்தில் இடம் பெறும் மந்திரங்கள் இல்லை. திருமணத்தில் வரதட்சணை வாங்குவது கிடையாது.

இந்த கிராமத்து மக்கள் எந்த குற்றசெயலுக்காகவும் சிறைக்கு சென்றதில்லை. முக்கியமாக 80 வயது முதல் 105 வயதுடைய பலர் இந்த கிராமத்தில் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றனர்.

அடுத்த செய்தி