ஆப்நகரம்

முதலமைச்சர் பழனிச்சாமி விழாவில் சலசலப்பு; கிராம ஊழியர்கள் திடீர் முழக்கம்...!

தமிழக முதலமைச்சர் பங்கேற்ற விழாவில் வருவாய் கிராம உதவியாளர்கள் திடீர் முழக்கத்தில் ஈடுபட்டனர்.

TNN 17 Aug 2017, 12:42 pm
சென்னை: தமிழக முதலமைச்சர் பங்கேற்ற விழாவில் வருவாய் கிராம உதவியாளர்கள் திடீர் முழக்கத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil village revenue employees shout in cm function
முதலமைச்சர் பழனிச்சாமி விழாவில் சலசலப்பு; கிராம ஊழியர்கள் திடீர் முழக்கம்...!


சென்னை கலைவாணர் அரங்கில் முதலவர் பழனிச்சாமி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றார். அவருடன் சக அமைச்சர்களும் அமர்ந்திருந்தனர்.

இந்நிலையில் விழா நடைபெற்று கொண்டிருந்த சமயம், கூட்டத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கவனித்ததில் கிராம நிர்வாக உதவியாளர்கள் எழுந்து, கோஷங்கள் எழுப்பினர்.

வரையறுக்கப்பட்ட காலமுறை ஓய்வூதியம் வழங்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றம் தொடர்பாக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடவில்லை என புகார் தெரிவித்தனர்.

அதுமட்டுமல்லாமல் கிராம நிர்வாக அலுவலர்களின் கோரிக்கைகள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர்.

Village revenue employees shout in CM function.

அடுத்த செய்தி