ஆப்நகரம்

தாமிரபரணி தண்ணீர் ஓடியும் எங்களுக்கு குடிநீர் கிடைக்கல; பெண்கள் போராட்டம்!

தண்ணீர் கிடைக்கவில்லை என்று கூறி, குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 10 May 2018, 6:11 am
நெல்லை: தண்ணீர் கிடைக்கவில்லை என்று கூறி, குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil Nellai Protest
குடிநீர் பிரச்சனை


நெல்லை மாவட்டம் வன்னிகோனந்தல் கிராமத்தில் ஆழ்துளைக் கிணறு மூலமாக மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது.

அதே கிராமம் வழியாக தாமிரபரணியில் இருந்து, கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக விருதுநகர் மாவட்டம் வரையிலும் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. தங்கள் கிராமத்தைத் தாண்டி, பிற மாவட்ட மக்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

ஆனால் தங்களுக்கு குடிநீர் விநியோகம் கிடைப்பதில்லை. இதற்காக பல ஆண்டுகள் அதிகாரிகளை முறையிட்டும் பலனில்லை. ஒரு குடம் ரூ.5 என வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.

எனவே நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுகிறோம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தங்கள் காலிக் குடங்களுடன், தரையில் அமர்ந்து போராடினர்.

அப்போது வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

Villagers agitate in nellai collector office campus for drinking water.

அடுத்த செய்தி