ஆப்நகரம்

இந்த நெல் மணிகளில் என்ன குறை கண்டீர்: ஆட்சியரிடம் விவசாயிகள் ஆத்திரம்

நெல் மணிகளை கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த விவசாயிகள், மதுரை ஆட்சியரை முற்றுகையிட்டு இந்த நெல் மணிகளில் என்ன குறை இருக்கிறது என ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 17 Jun 2016, 6:48 pm
மதுரை: நெல் மணிகளை கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த விவசாயிகள், மதுரை ஆட்சியரை முற்றுகையிட்டு இந்த நெல் மணிகளில் என்ன குறை இருக்கிறது என ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil villagers confront madurai district collector with bags of paddy complaints
இந்த நெல் மணிகளில் என்ன குறை கண்டீர்: ஆட்சியரிடம் விவசாயிகள் ஆத்திரம்


மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், விவசாய பயிற்சிக்காக வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அழகு சேர்வையிடம் அவரது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கேட்டுக் கொண்டார்.

அப்போது மதுரை மாவட்டம் செல்லம்பட்டி வட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் சிலர் திடீரென கூட்டம் நடைபெற்ற இடத்தினுள் நுழைந்தனர். தொடர்ந்து, தாங்கள் கொண்டு வந்த நெல் மணிகளை ஆட்சியரிடம் காட்டி, இந்த நெல் மணிகளில் என்ன குறை இருக்கிறது. இதனை கொள்முதல் செய்யும் அதிகாரிகள் வாங்க மறுக்கிறார்கள் என்றனர்.

மேலும், வேளாண் துறையிடம் இருந்து நெல் வாங்கி, அதனை கஷ்டப்பட்டு பயிர் செய்து விளைவித்தால், இதில் குறை இருக்கிறது எனக் கூறி கொள்முதல் செய்யும் அதிகாரிகள் வாங்க மறுக்கிறார்கள். எங்கள் பகுதியில் உள்ள கொள்முதல் அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர் என்று பரபரப்பு குற்றஞ்சாட்டினர்.

விவசாய பெருங்குடி மக்களின் இந்த திடீர் முற்றுகையால் அதிர்ச்சியடைந்த ஆட்சியர், அவர்களிடம் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறி சமாதானப்படுத்தி அனுப்பினார்.

அதன்பின்னர், நெல் கொள்முதல் செய்யும் இடங்களில் ஆய்வு நடத்துமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி