ஆப்நகரம்

விழுப்புரம்: பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 20 மாணவர்கள் மயக்கம்

விழுப்புரம் அருகே பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 20 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். இதையடுத்து, சத்துணவு ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

TNN 4 Jun 2016, 6:02 pm
விழுப்புரம் அருகே பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 20 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். இதையடுத்து, சத்துணவு ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
Samayam Tamil viluppuram 20 students faint because of poisoned mid day meal
விழுப்புரம்: பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 20 மாணவர்கள் மயக்கம்


விழுப்புரம் மாவட்டம், காணை அருகே உள்ள கொண்டங்கி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. அப்போது 9ம் வகுப்பு மாணவி ஷன்மதிக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லியின் வால் கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி ஆசிரியர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து ஆசிரியர்கள் மற்ற மாணவ, மாணவியரை சத்துணவு சாப்பிட விடாமல் தடுத்தனர்.

இருப்பினும் சத்துணவை சாப்பிட்ட ஷன்மதி உள்பட 20 மாணவ, மாணவியருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்கள் அனைவரும் அருகில் உள்ள தோகைப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகள் அனைவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

இந்நிலையில் சத்துணவு சமைப்பதில் கவனக்குறைவாக செயல்பட்டதாக சத்துணவு அமைப்பாளர் அம்பிகா, சமையலர் ஜோதி, உதவியாளர் அம்சவள்ளி ஆகிய 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் லட்சுமியின் அறிவுரைப்படி, மாவட்ட சத்துணவு திட்ட உதவியாளர் அர்ச்சுனன் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அடுத்த செய்தி