ஆப்நகரம்

விழுப்புரத்தில் பேருந்தில் எடுத்து சென்ற ரூ. 44 லட்சம் பறிமுதல்!

விழுப்புரத்தில் அரசு பேருந்தில் எடுத்து சென்ற ரூ.44 லட்ச பணத்தை பறக்கும் படையினரின் பறிமுதல் செய்தனர்.

Samayam Tamil 20 Mar 2019, 7:41 pm
விழுப்புரத்தில் அரசு பேருந்தில் எடுத்து சென்ற ரூ.44 லட்ச பணத்தை பறக்கும் படையினரின் பறிமுதல் செய்தனர்.
Samayam Tamil ksabflans


விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணமோ அல்லது பரிசு பொருட்களையோ வாகனங்களில் கொண்டு செல்வதை தடுக்க மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று விழுப்புரம் சென்னை-திருச்சி தேசிய நெடுந்சாலையில் தனியார் ஓட்டல் அருகில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சென்னையில் இருந்துதலைவாசல் சென்ற ஒரு அரசு பேருந்தை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் கட்டை பையில் பணத்தை வைத்து அதன் மீது துணியை வைத்து மறைத்து பணத்தை எடுத்து செல்வது தெரியவந்தது பின்னர் அந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் அவரிடம் விசாரணை செய்ததில் அவர் பெயர் அழகுவேல் என்பதும் ரூபாய் 44லட்சத்தைசென்னையில் இருந்து தலைவாசல் எடுத்து செல்வதாகவும் தெரிவித்துள்ளார் அந்த பணத்திற்கு எவ்வித ஆவணமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி